யாழ் கோண்டாவிலில் காதல் சண்டை – வீடு உடைப்பு

காதல் சண்டை
Spread the love

யாழ் கோண்டாவிலில் காதல் சண்டை – வீடு உடைப்பு

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்.வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave a Reply