காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை

Spread the love

காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (18) மாத்திரம் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள்

தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

திட்டமிடப்பட்டகுழுவினால் இந்த திருட்டுச் சம்பவங்கள்

முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தமது மோட்டார் சைக்கிளை

பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply