அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
வவுனியா, தரணிக்குளம் பகுதியில், தலையில் காயங்களுடன், மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில், இன்று (19) அதிகாலை
சடலமொன்று கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்றும் பிரேத பரிசோதனைகளுக்காக,
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.