கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
Spread the love

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்


போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே பகுதியில் கடமையாற்றும் 2 கலால் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

குறித்த உத்தியோகத்தர்களை மத்துகம, சிறிகடுல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர்கள் உத்தியோகத்தர்களிடம் இருந்த பணத்தை அபகரிக்கச் சென்ற போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சந்தேகநபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்