கணவரின் தாக்குதலில் மனைவி பலி
கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இரத்தினபுரி – அயகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் பொலிஸாரால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதுடன் இவர் 45 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அயகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி