கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா

கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
Spread the love

கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகல்

தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

கட்சியில் கடும் கருத்து மோதல்

தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

எதிர் வரும் தேர்தலை அடுத்து உள்கட்சிக்குள் மோதல்கள் வெடித்துள்ளன .அதன் ஒரு அங்கமாகவே இந்த விலகல் இடம்பெறுகிறது .