கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை
சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற CCTV காட்சி வெளியாகியுள்ளன.
குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது.
குறித்த யுவதியும், இளைஞன் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (11) மாலை 7 மணி அளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்த
நிலையில் பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
எனினும் எவரும் மீட்கப்படவில்லை.
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
இந்த நிலையில் நேற்று (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக
கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.