சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா
இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்
பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஹெரோயினுடன் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக
விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த
நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்..