ஒருவர் குத்திக் கொலை

Spread the love

ஒருவர் குத்திக் கொலை

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதிப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) காலை லக்ஷ்மிபர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அங்கிருந்தவர் மற்றும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மூவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கம்பஹா லக்ஷ்மி வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply