ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்

ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்
Spread the love

ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தற்போது கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.

சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இன்று (08) காலை 10 மணிக்கு அரசியல் குழுவின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் சிரேஷ்ட உபதலைவருக்கு இவ்வாறு அரசியல் பீட கூட்டத்தை அழைப்பதற்கு சட்டரீதியாக எந்த தகுதியும் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.