ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை
ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.
அண்மையில் இடம்பெற்ற நேபள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய தம்பி மதிசுதா அவர்கள் அழைத்துக் கெளவிக்கப்பட்டிருந்தார்.
தயாரிப்பாளரே கிடைக்காத உள்நாட்டு சினிமாவில் ஐபோனில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பெரிய பெரிய நிறுவனங்களின் படங்களுக்குள் இவ் விருதைப் பெற்றிருக்கின்றது.
எம்மவர்களின் வலிகளை
தனது திறமை மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கும் தம்பி மதிசுதாவிற்கு எம் வாழ்த்துக்கள்.
உங்கள் திரைப்பயணம் வெற்றிகரமாக தொடரட்டும் என பாரளுமன்ற உருபினர் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .