ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று (06) 21 வாகனங்களைப் பொலிஸார் கைபற்றியிருப்பதாகவும்,
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2,600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,
403 வாகனங்களையும் பொலிஸார் இதுவரையில் கைபற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்