உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!
வா வா நீயெந்தன் கனவுக்குள்
வாழ வழி காட்டு செயலுக்குள்
உன்னை நானும் நம்புகிறேன்
உயிர்வாழ தென்பு தா வாழ்கிறேன்
கடலாட்டும் அலையாக ஆடவா – நான்
கரை தேடும் படகாய் ஓடவா
உயர்ந்திட வாழ்விலே என்ன வழி
உயிரே நீ சொல்லு புதுவழி
எனக்கான சாலையை நான் அமைக்க
ஏறியே நாளும் பயணிக்க
வா வா நீயெந்தன் அருகிலே
வாழ வழி காட்டு முடிவிலே
அல்லும் பகல் துடித்து விட்டேன்
அழுது அழுது களைத்து விட்டேன்
இது வென்ன வாழ்வேன்றே
இன்று வெறுத்து விட்டேன்
நீயே எந்தன் பேரழகு
நீயே தா எனக்கழகு
உன்னை நானும் நம்புகிறேன்
உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-02-2022