உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
உக்கிரேன் தலைநகர் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்த நிலையில் ,அதனை தடுக்கும் முகமாக ,பாரிய ஏவுகணைகளை உக்கிரேனுக்கு பிரிட்டன் வழங்குகிறது .
அவசர உதவியாக இந்த ஏவுகணைகளை உக்கிரேனுக்கு பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளது .
இந்த ஏவுகணைகள் ரசியா நடத்தும் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது .
கிரிமியா பாலத்தை உக்கிரேன் உடைத்ததன் பின்னர் ,ரசியா உக்கிரேன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
ரசியாவின் திடீர் தாக்குதலினால் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்து வருகிறது .
இவ்வாறான நிலையிலேயே தற்போது ,பிரிட்டன் இவ்விதமான நவீன் ஏவுகணைகளை வழங்கி வருகிறது .
ஆயுத உதவி என்கின்ற பெயரில் பிரிட்டன் ,தனது ஆயுத வியாபாரத்தை மிக கச்சிதமாக புரிந்து வருகிறது .
ஆயுதங்களை கொள்வனவு செய்தே உக்கிரேன் பிச்சைக்கார நாடக மாறும் நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது எனலாம் .