ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரானார் விக்கி
சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் கட்சியி தலைவராக சி.வி.விக்கினேஸ்வரன் தொழிற்படவுள்ளார்.
சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சி தனது பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியாக மாற்றியது. குறித்த கட்சியிலேயே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில் பெயர் மாற்றப்பட்ட ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவராக விக்கினேஸ்வரன் செயற்படவுள்ளதுடன், செயலாளராக சிவசக்தி ஆனந்தன் செயற்படவுள்ளார். உப தலைவர்களாக சுரேஸ்பிறேமச்சந்திரன், பேராசிரியர் சிவநாதன், அனந்தி சசிதரன், சிறிகாந்தா ஆகியோர் செயற்படவுள்ளனர்.