இவன் தான் மனிதன்
சாதியில் இவனொரு சலவை
மதியில் இவனொரு கலவை
அன்பால் அணைத்த தந்தை
அழுதாள் இங்கொரு மங்கை
நனைந்தன எந்தன் விழிகள்
நடந்தன எந்தன் நடைகள்
பறந்தன எந்தன் கவலை
முளைத்தன புதிய சிறகு
கற்றது பள்ளியில் குறைவு
கற்றேன் இங்கே நிறைவு
விதையை எனக்குள் விதைத்த
வித்தக மனிதன் என்றேன்
இரு நாள் இவரை படித்தேன்
இதயம் மலர்ந்து கனத்தேன்
ஒரு நாள் உன்னை பார்ப்பேன்
ஒன்றாய் இருந்து சுவைப்பேன்
அந்த நாளை வளர்ப்பேன்
அதற்காய் இன்றே உழைப்பேன்
அனுபவம் உயர்ந்த கல்வி
அதனை தந்தது உந்தன் செவ்வி
-வன்னி மைந்தன் –
06-08-2020