பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

Spread the love

பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்..

சந்தேகத்திற்குரிய அதிபர், மாணவர் ஒருவரை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அது 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் இலஞ்சம் கோரியதாக குழந்தையின் தந்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் , ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர், அதிபர் இலஞ்சம் வாங்கும் வேளையில் மாணவரின் தாயாகக் தன்னை அடையாளப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்

    Leave a Reply