இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு

Spread the love

.இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு

இலங்கை விமானப்படை அதன் 71 ஆவது நிறைவாண்டை இன்று கொண்டாடுகின்றது.

இலங்கை விமானப்படை இன்று அதன் 71 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. இலங்கை றோயல் விமானப்படையாக 1951ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி ஆரம்பித்த இந்தப் படையின் முதலாவது விமானப் படைத் தளபதி

குறூப் கப்டன் ஜீ.சி.பிளே-ஓன் ஆவார். முதலாவது இலங்கை விமானப் படைத் தளபதியாக வைஸ் மார்ஷல் ஜீ.ஆர்.அமரசேகர 1962ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

1972ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படையாக பெயர் மாற்றப்பட்டது. இரண்டு வகையான பத்து விமானங்களுடனும் ஆயிரத்து 200 படை

வீரர்களுடனும் விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 18 விமானப் படைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய திறன்விருத்தி மற்றும் ஜனாதிபதி உறுதிகள் பலவற்றையும் விமானப்படை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரத்மலானையில் உள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையம் அதன் 84 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. நாட்டின் சிவில் விமான சேவை

நடவடிக்கை 1930 ஆண்டுகளில் ஆரம்பமானது. அப்போதைய ஆளுனரான சேர் அன்றூ கெல்டொக்கொட் தலைமையில் 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி இரத்மலானை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் கொழும்புக்கும்

மும்பைக்கும் இடையிலான விமான அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 84 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு வைபவம் கடந்த

திங்கட்கிழமை இடம்பெற்றது. விமான நிலைய மற்றும் விமான சேவைகளுக்கான இலங்கை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜென்தல் ஜீ.ஏ.சந்திரசிறி இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்

Leave a Reply