இலங்கை வந்தடைந்த வெளிநாட்டு இராணுவம்
அரேபிய நாட்டு கடற்படையை சேர்ந்த 51 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின்
மூலம் டுபாயில் இருந்து இன்று (28) காலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கோத்தபாயாவின் எவன்காட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுத கப்பல் ஒன்றில்
சேவையாற்றுவதற்காக குறித்த கடற்படையினர் வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தில் வைத்து குறித்த கடற்படையினர் பீ.சீ.ஆர்
பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது