இலங்கையில் 63,600 பேர் சுயதனிமைப்படுத்தலில்
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் சுமார் 63 ஆயிரத்து 600இக்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இதிர் குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 452 குடும்பங்கள்
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்
பெறுமதியான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகளை
விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் தெரிவிக்கப்படுகிறது.