இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு
Spread the love

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

2023 – 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன் இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்