இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளகத்தே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ரணில் விக்கிரமசிங்கே தயாராகும் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்
பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபாய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது .தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள ரணில் பிரதமராக நியமிக்க பட்டார்
ரணிலின் தெரிவினால் நாட்டை காப்பற்றி விடலாம் என எதிர்பார்த்த கோத்தபாயாவுக்கு ரணில் தடையாக விளங்கி வருகிறார் ,
அதனால் ரணில் விக்கிரமசிங்கா கோத்தாவின் ஆட்சியை கவிழ்த்து புது சாலை அமைத்து பயணிக்க தயாராகி வருகிறார்
ரணில் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ள பட்டாலும் அந்த கூட்டணி ஆட்சி கூட ஒன்றைரை வருடங்களுக்கு பின்னர் காணாமல் போகும் நிலையும், அதன் பின்னர் தேர்தல் மூலம் புதிய ஆட்சி ஒன்றை அமைக்கும் நிலை உருவாக்கம் பெறலாம்
தற்போது பலம் இழந்துள்ள தனது கட்சியை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வில் ரணில் நகர்ந்து வருகிறார்,
கோத்தாபாட ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கேஇடையில் தொடரும் உள்ளக மோதல்கள் விரைவில் இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறுவதற்கான சமிக்கையை காட்டி நிற்கிறது
- வன்னி மைந்தன் –