இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது

Spread the love

இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது

தமது நாட்டுக்குத திரும்பமுடியாது இலங்கையில் தங்கியிருந்த 156 இந்தியப்பிரஜைகள் நேற்று நாடுதிருப்பினார்கள்.

அவர்களை அழைத்து செல்வதற்கென இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

ஊடக அறிக்கை

இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது

இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள்

கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு

அழைத்துவருவதற்காக இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப் டிருந்தது.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக

வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு

அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை

தெரிவித்தார்..WhatsApp Image 2020 06 15 at 12.33.55 PM 3கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த

இந்திய பிரஜைகள் சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல்

ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை 2020 மே 29 ஆம் திகதி விசேட ஏர் இந்திய விமானம் ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும்

இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1000க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

      Leave a Reply