இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்
காய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள்
சிகிச்சை (க்கிளிக்கு) களில் கலந்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் ஜாசிங்க விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் பின்வருமாறு:
பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக
மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் – காய்ச்சல், இரத்தப்போக்கு,
கடுமையான தலைவலி ,சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits),
நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு
ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
தரமான
சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும்
கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.