இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்
நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களுடன் தொடர்புகளை
மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அவர்களின்
செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு முதலில் வருகைதந்துள்ளனர்.
அந்நாட்டிலிருந்து இதுவரை 390 பேர் வருகைதந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.