இறந்த கருஞ் சிறுத்தை மரபணு சோதனைகள் ஆரம்பம்

Spread the love

இறந்த கருஞ் சிறுத்தை மரபணு சோதனைகள் ஆரம்பம்

சமீபத்தில் பொறியொன்றில் சிக்கி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய,

மரபணு பரிசோதனையை நடத்துவதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்தார்.

உயிரிழந்த கறுஞ்சிறுத்தையின் இரத்த மாதிரியும், தற்போது உயிர்வாழும் ஒருவகை சிறுத்தையின் இரத்த மாதிரியும்

பெறப்பட்டு, ஒப்பீட்டு முறையிலான டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படும்.

இதன் மூலம், இந்தக் கறுஞ்சிறுத்தை பிரத்தியேகமான வகையைச் சேர்ந்த உயிரினமா அல்லது தற்போதுள்ள உயிரினத்தின் தோலில்

ஏற்பட்ட நிறமூர்த்த குறைப்பாட்டால் கறுப்பாக இருக்கிறதா என்பது கண்டறியப்படும் என கலாநிதி பண்டாரநாயக்க கூறினார்.

இறந்த கருஞ் சிறுத்தை
இறந்த கருஞ் சிறுத்தை

      Leave a Reply