இராணுவத்திற்கு நெல் வழங்க நடவடிக்கை- கோட்டா அதிரடி
துரு மிதுரு – என்ற புதிய நாட்டுக்கான பசுமை திட்டத்தின் கீழ் அறுவடை
செய்யப்பட்ட ஒரு தொகை நெல் இராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு கையளிப்பு.
இராணுவத்தளபதியின் தொலைநோக்கிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட துரு மிதுரு என்ற புதிய நாட்டுக்கான பசுமை
திட்டத்திற்கு அமைவாக கைவிடப்பட்டிருந்த வயல் நிலங்களில் உற்பத்தியை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை வெற்றி பெறச்
செய்வதற்கு இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பாளர் சபையினால்
இராணுவ விவசாய பண்ணை நிலங்களில் மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் கீழ் பெறப்பட்ட அறுவடை நியாயமான விலையின் கீழ் இராணுவ வீரர்களுக்கு வழங்கும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019 பெரும்போகம் மற்றும் 2020
சிறுபோகத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்திற்கு அருகில்
உள்ள கைவிடப்பட்ட வயல் காணிகள் மற்றும் இராணுவத்திற்கு சொந்தமான
விவசாய பண்ணை வயல் காணிகளில் இரசாயன பொருட்களை பயன்படுத்தாது
பெறப்பட்ட அறுவடை இராணுவ வீரர்களுக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.