இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு

இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
Spread the love

இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு

இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக ,இஞ்சி அதிகம் பயன் படுத்தும் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் பொருட்களின் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் இஞ்சியின் விலை அதி உச்ச விலைக்கு சென்றதினால் ,அதனை இந்த விலை கொடுத்து வாங்கிட முடியா நிலையில் மக்கள் திணறி வருகின்றனர் .

உள்ளூர் உற்பத்தியில் இஞ்சி பயிர் செய்கை வீழ்ச்சி அடைந்த நிலையிலும் ,இறக்குமதி குறைவடைந்து நிலையில் ,இஞ்சியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது .

கோட்டபாய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் பின்னர் ,தற்போது இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது அதிகரித்துள்ளது .

உயரும் பொருள் விலை தவிக்கும் மக்கள்

திடீர் திடீரென உயரும் பொருள் விலையினால் ,மக்கள் அன்றாட வாழ்வியல் பாதிக்க பட்டுள்ளது .

காய்கறி விலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பால் ,ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வந்தனர் .

அவ்வாறான நிலையில் இலங்கையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக அதிகரித்து காணப்படுவது ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .