ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்
லிபியாவின் தர்ஹுனா விமான நிலையத்தில் தரை இறங்கிய இராணுவ அண்டனோ ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
விமானம் விமான தளத்தில் தரை இறங்கிய பொழுது , விமானத்தை நோக்கி
பாய்ந்து வந்த ஏவுகணை குறி தவறாது சுட்டு வீழ்த்தியது .
இந்த ஏவுகணை பட்டு விமானம் முற்றாக வெடித்து சிதறியது .
இதில் இருந்த இராணுவத்தினர் அனைவரும் பலியாகியுள்ளனர்
குறித்த விமானத்தில் மருத்துவ பொருட்களே எடுத்து வரப்பட்டது என லிபியா அரசு தெரிவித்துள்ளது ,ஆனால் துருக்கி ,மற்றும்
துருக்கிய ஆதரவு படைகள் இதில் ஆயுதங்கள் எடுத்து வரப்பட்ட விமானத்தை தாம் தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
இந்த விமானத்தில் ஆயுதங்கள் எடுத்து வரப்படுகின்றன ,இந்த நிமிடத்திற்கு
விமானம் இங்கே தரை இறங்கும் என்ற தகவலை வழங்கியது யார் ..?
இதில் இரட்டை உளவாளிகள் உள்ளனர் என்ற பெரும் கேள்வியோடு பயணிக்கிறது
இந்த விமான அழிப்பு .சட்லைட் படங்கள் இந்த விமானம் முற்றாக அழிக்க பட்டதை தெளிவாக காட்டுகிறது .
இரு தரப்பிலும் இடைவிடாது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன ,தொடர்ந்து
வேகம் பெறும் இராணுவ முனைப்புக்கள் வரும் நாட்களில் பெரும் போரை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது