அமைச்சருடன் பழகிய 118 பேருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

Spread the love

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய

118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள

அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள

சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேக செயலாளருக்கும்

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply