அமெரிக்கா விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சேதம் மூடி மறைப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முதல்தர விமான தளங்களில் ஒன்றாக விளங்கும் Balad தளம் மீது, ஆள் இல்லாத
உளவு விமானம் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதன் பொழுது அங்கு பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும்
,இழப்பு பலமாக இருக்கலாம் என நேரில் கண்ட சாட்சிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
,எனினும் அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில் எதனையும் இதுவரை வெளியிடவில்லை
வளை குடா கடலில் அமெரிக்கா போர் கப்பலை துரத்திய ஈரானிய சண்டை படகுகள் முற்றுகை
நடந்து 24 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
மேலும் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக விலகும் வரை தமது
பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை கவனிக்க தக்கது