அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் நாடு வந்தனர்
அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் நேற்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் எமிரேட்ஸ் ஆன்லைன் விமான சேவைக்குச் சொந்தமான நுமு 2528
விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை
வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின்
பின்னர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டதாக கடமை நேர முகாமையாளர் மேலும் தெரிவித்தார்