அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Spread the love

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுராதபுரம் – கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன