அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

Spread the love

அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்


நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய


கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்


கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.

    Leave a Reply