அதிக வெப்பம் கிழக்கு லண்டனில் பற்றி எரிந்த வீடுகள்
இன்று பிரிட்டன் முழுவதுமாக வழமைக்கு மாறாக 40 C வெப்ப நிலை காணப்பட்டது .இந்த அதிக வெப்பத்தில் சிக்கி கிழக்கு லண்டன் Wennington, பகுதியில் வீடுகள் பற்றி எரிந்துள்ளன .
லண்டனில் மட்டும் அதிக வெப்பம் காரணமாக பத்து தீ விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன .
பிரிட்டனில் அதிக அவெப்பம் மக்கள் அவதி
லண்டனில் நாள் தோறும் சுமார் 600 அழைப்புக்கள் தீயணைப்பு படையினருக்கு கிடைக்க பெறும் .
ஆனால் இன்று வழமைக்கு மாறாக 1600 அவச அழைப்பு விடுக்க பட்டுள்ளது.
இதனால் தீயணைப்பு படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
லண்டன் லூசியம் பகுதியில் தீயில் எரிந்த கடை
மாற்று திட்டங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்க பட்டிருந்ததால் பாரிய தீ விபத்துக்கள் தடுக்க பட்டன.
மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை பட்டுள்ளது .மக்கள் பார்க் மற்றும் கடற்கரை பகுதிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை வரும் வாரம் ஆபத்து
பிரிட்டனில் இன்று ஏற்பட்ட இந்த கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்கினர்
பலர் மக்கள் மூச்சு திணறலில் சிக்கி தவித்தமை நடந்தேறியுள்ளது குறிப்பிட தக்கது