அகதி தமிழனின் வலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ

அகதி தமிழனின் வாலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ
Spread the love

அகதி தமிழனின் வலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ

அகதியாய் போன ஒவ்வொருத் தமிழர்களின் வலியில் உருவானப் பாடல் (தோணிப் புடிச்சு). இப்பாடலினுடைய கால அளவு பெரிதுதான் ஆனால் அதைவிட பெரிது, இப்பாடல் கொடுக்கும் தாக்கம்.

தோணிப் புடிச்சு சென்ற ஈழ தமிழரின் அகதி வாழ்வும் ,ஒப்பாரி சத்தங்களும் ,தாயகம் விட்டு பிரிந்த சொந்தங்களின் ஏக்கமும் ,கவலை கண்ணீராக ஓடும் ,தோணிப் புடிச்சு செல்லப்பா பாடல் கேட்டல் அழுகை வரும் பாடல் .

இந்த தோணிப் புடிச்சு என்ற பாடலை கேட்டு பலமுறை நானே அழுது விட்டேன் ,அவ்விதம் பெரும் தாக்கத்தை எனக்குள் தோணிப் புடிச்சு பாடல் ஏற்படுத்தியது ,அது போலவே உங்களுக்கும் அமையும் .

தேனிசை செல்லப்பா தோணிப் புடிச்சு பாடலை உருகி உருகி ,பாடியுள்ளார் உணர்வு ,அற்புதம் இசை ,காணொளி கலவை சிறப்பு ,பங்காற்றிய யாவருக்கும் எதிரி இணையத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் .

வலிகள் நிறைந்த வரிகளும், உணர்வு நிறைந்த குரலும், இரண்டையும் தாங்கிப் பிடிக்கும் இசையும் தோணிப் புடிச்சு இப்பாடலின் தாக்கத்தை நன்றாகவே எடுத்துச் சொல்லும்.

எனவே வலிகள் நிறைந்த வரிகளை உணர, முழுமையாகக் இப்பாடலைக் கேளுங்கள், பகிருங்கள்.

நன்றி.

பாடியவர் :
“பாசறைப்பாணர்”
தேனிசை செல்லப்பா

இசை : இளங்கோ செல்லப்பா

வரிகள் : “கவிஞர்” கவிஅன்பன்

காணொளி ஆக்கம் : பாவேந்தன் கலையகம்