வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
வடக்கு லண்டன் Enfield பகுதியில், பாரிய தீ பரவல் ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதிகள், தீயில் எரிந்து அழிந்துள்ளன .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
எழுபது தீயணைப்பு வீரர்கள், இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .
தீ பரவல் காரணமாக ,இதன் அருகில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.
இதனால் எழுந்த தீ புகை மூட்டம் ,பல கிலோ மீட்டர் தூரம் வரை ,தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
அதிக வெப்பம் காரணமாக, இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நம்ப படுகிறது .
இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக ,மூன்று வாரங்களுக்கு முன்னரும் ,இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள் ,இடம்பெற்றமை குறிப்பிட தக்கது .