லண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம்- photo
இன்று பிரிட்டன் லண்டன் பகுதியில் அமைந்துள்ள Royal Court of Justice நீதிமன்றம் முன்பாக தமிழர்களின் கழுது வெட்டுவேன் என
சமிக்கை மூலம் தெரிவித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்த சிங்கள அரச பயங்கரவாத இராணுவ தளபதிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர்
பிரியங்கா பெர்னாண்டோ என்ற இராணுவ தளபதியே லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் நடத்திய சாத்வீக
போராட்டத்தின் பொழுது அங்கு கலந்து கொண்டவர்களை காணொளிகள் ,படங்கள் பிடித்து ,சமிக்கை மூலம் கழுத்து வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்
மேற்படி கிரிமினல் குற்றம் தொடர்பாக ,அவருக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கை அடுத்து அவர் லண்டனை விட்டு தப்பி இலங்கை சென்றார் ,
இதனை அடுத்து கொரனோ கால கட்டத்தில் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர் அதில் சிலர் மட்டும் கலந்து கொள்ள
போலீசார் அனுமதி வழங்கியதை அடுத்து மேற்படி தமிழர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இலங்கை செல்லும் தமிழர்கள் ,குறித்த இராணுவ தளபதியின் நேரடி வழிகாட்டலில்
கடத்த பட்டு,கொலை,மற்றும் காணாமல் செய்யும் நடவடிக்கையில் தொடராக ஈடுபட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிட தக்கது