மைத்திரிபால சிறிசேன வெற்றி
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடைபெற்ற பொதுத் தேர்தலில்
வெற்றி பெற்றுள்ளார். இவர் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு 111,137 வாக்குகளைப் பெற்று பட்டியலில் முதலாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த கட்சியின் சார்பில் இந்த மாவட்டத்தில் மேலும் மூவர் பாராளுமன்ற
உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். றொசான் ரணசிங்க
90,615 வாக்குகளையும், சிறிபால கம்லத் 67,917 வாக்குகளையும், ஏ.அத்துகோரளை 45,795 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதேவேளை இந்த மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்
சார்பில் கிங்ஸ் லோரன்ஸ் 22,392 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.