மாடுகளை சுட்ட இருவர் கைது
மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திவந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை
வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.
மாடுகளை சுட்ட இருவர் கைது
இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை
(16)மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- இவளை பார்க்க யாரும் இல்லை
- ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி
- மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- சரமாரியாக வெட்டிய கும்பல்
- காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
- துப்பாக்கியுடன் ஒருவர் கைது
- மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
- கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
- அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு
- நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு