பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்
அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.
மக்களவைக்குள் அத்துமீறி பிடிபட்ட இருவரிடம் டெல்லி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்றில் பதற்றம் புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்
பார்வையாளராக உள்ளே நுழைய யார் பரிந்துரை செய்தது? மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
பிற புலனாய்வு முகமைகளும் அவர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான புதன்கிழமை (13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்