தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா மத்திய பகுதியை இலக்கு வைத்தது ,அரச இராணுவம் நடத்திய தேடி அழிப்பு இராணுவ நடிக்கையில் 100 க்கு மேற்பட்ட ,அல் சபா தீவிரவாதிகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
சோமாலிய அரச இராணுவத்தை இலக்கு வைத்து அலசபா போராளி குழுக்கள் ,அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
இவர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , அரச இராணுவம் பாரிய இழப்பை சந்தித்து வருகிறது .
அதற்கு பதிலடி தரும் வகையில் ,அரச இராணுவத்தினர் ,இந்த தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .
கடந்த வாரம் அரச இராணுவத்தின் ஆயுத வினியோக அணியினை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,அந்த இராணுவ பாதுகாப்பு அணியினர் முற்றாக அழிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .