ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.
அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான
தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விளக்கினார்.
ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
காலநிலை மாற்றத்தை திறம்படக் கையாள்வதற்குத் தேவையான நிதி திரட்டும் முக்கியமான பிரச்சினை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்
, காலநிலை தொடர்பானத் திட்டங்களுக்கு நிதி மூலங்களை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண
விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
- எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
- இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
- பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
- அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்