கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(19) காலை 9 மணிமுதல் மறுநாள் (20) அதிகாலை 3
மணிவரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01, 02, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, நீர்வழங்கள் வடிகாலமைச்சபை கூறியுள்ளது.
அதேநேரத்தில், கொழும்பு 03, 04, 07, 08 மற்றும் 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும்.