கிளிநொச்சியில் – சிறி எம்பி பலத்தை உடைக்கும் நகர்வில் – கோட்டா கும்பல்
இலங்கையில் – தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெற்றவர் சிறிதரன் அவர்கள் .
இவர் சாதனர மக்கள் மத்தியில் இருந்து எழுந்து வந்த ஒரு கற்று தேர்ந்த நேரிய சமூகத்தின்
வழிகாட்டியாக விளங்கியவர் ,தற்போதும் அந்த மக்களுக்கு விளங்கி வருகிறார் .
இவரை இலகுவாக அணுகி மக்கள் பேசும் ஒரு மக்கள் நட்புறவை தொடர்ந்து பேணி வருபவர் .
சிறியவர் ,பெரியவர் வரை மதிப்பு கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற தலைக்கனம் அற்று செயல் படும்
ஒருவராக தமிழ் அரசியல் எம்பிகளுக்குள் முன்னுதாரணமாக இவர் உள்ளார் .
இவ்வாறு அந்த மக்களி டம் பேசும் பொழுது நமே வியந்து போய் நின்றோம் .
இது ஒரு தலைவனுக்கு உள்ள அறநெறி வழிவந்த பண்பியலாக மாற்றம் பெற்றுள்ளது .
இவ்வாறான மக்கள் ஆதரவு பெற்று தொடர்ந்து வெற்றி நடை போடும்சிறிதரனை ,எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் ,பல நெருக்கடிக்குள் இவரை சிக்க வைத்து
கிளிநொச்சியில் – சிறி எம்பி பலத்தை உடைக்கும் நகர்வில் – கோட்டா கும்பல்
அவருடைய ஆசனத்தை பறித்து விட வேண்டும் என துணை உதிரி குழுக்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சுமந்திரன் ,மாவை உள்ளிட்டவர்கள் விரும்புகின்றனர் .
அதன் ஒரு கூட்டு நகர்வாக அவரை வீழ்த்தும் நகர்வுகள் திரைமறைவில் முடக்கிவிட பட்டுள்ளன, தற்கால நகர்வுகள் சில இதனை அப்பட்டமாக வெளி காட்டுகின்றனர் .
கூட்டமைப்பே இரண்டாக உடைக்கும் நகர்வில் மகிந்த ,கோட்டாபய தீவிரம் காட்டி வருகின்றனர் ,அந்த உடைப்பை
விரைவில் சுமந்திரன் தொடக்கி வைப்பர் என்பதையே அடித்து கூறலாம் .
கிழவர் சம்பந்தர் மரணத்தின் பின்னர் சுமந்திரன் கட்சியின் தலைவராக பதவி ஏற்க உள்ளார் ,இவர்
தலைவர் பதவி ஏற்றால் கூட்டமைப்பு தானாகவே காணாமல் போய்விடும் நிலை உள்ளது .
அதற்கான காலம் நெருங்கி விட்டது ,சம்பந்தர் விரைவில் உலகை விட்டுச செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்ற கணிக்க தோன்றுகிறது .
இந்த வருத்தத்துடன் கூட்டமைப்பு காணாமல் போகும் அத்தியாயம் எழுத படும் என்றே நிகழ்வுகள் படம் பிடித்து காட்டுகின்றன .
- வன்னி மைந்தன் –