எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
இலங்கையில் எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் தாக்குதலில் சிக்கி 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்க பட்டுள்ளதான ,புதிய புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர் என்கிறது அந்த விபரம் .
மேலும் இந்த எயிட்ஸ் நோயின் தாக்குதலுக்கு இரண்டு புத்த பிக்குகளும் உள்ளாகியுள்ளது ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை எங்கும் பரவலாக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுவதால் ,அதற்கு அடிமையான மாணவர்கள் ,மக்கள் ,செக்ஸ் தொடர்பில் உரிய பாதுகாப்பு முறைமையை கடை பிடிப்பதில்லை .
இதனாலேயே இந்த உயிர்கொல்லி எயிட்ஸ் நோய் தாக்குதல் , அதிகரித்து காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .