உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் ரசியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இரு தரப்பிலும் ,ஒரு லட்சம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் இரு தரப்பிலும் பாதிக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் ,டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .
பேரழிவை ஏற்படுத்திய உக்கிரேன் போரில் ,நாற்பது ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகியும் , அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது சுயாதீன தகவல் ஒன்று .
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
பலத்த அவமானங்களுடன் ரசியா படைகள் ,போரை விட்டு அகல முடியாத நெருக்கடி நிலையில், சிக்கி தவித்து வருகின்றனர் .
ரசியா இராணுவத்தினருக்கு பேரழிவை வழங்கி வருகின்ற பின்புலத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் போர் ஆயுதங்கள் முதன்மை வகிக்கின்றன .
உக்கிரேனில் ரசியாவுக்கு எதிராக போரை நடத்தி வருவது, பிரிட்டன் அமெரிக்கா என்பதே இன்றைய களமுனை கூறும் தகவலாக உள்ளது .
ரசியாவின் கோபம் பிரிட்டன் அமெரிக்கா மீதே தற்போது திரும்பியுள்ளது எனலாம் .