ஈழம் பிறந்ததின்று – அள்ளி கொஞ்சு ..!
எழுவான் திசையில் வருவான் தலைவன்
அழுகை நிறுத்தி எழுவான் தமிழன் ….
அஞ்சி ஓடும் பகையை நொறுக்கு
ஆழும் பலம் உனதாய் ஆக்கு ….
வீழ்ந்தோம் என்று கதறாதே
விதி செய்வோம் பதறாதே …
விட்ட இடம் தொட்டு
விடுதலை வா நட்டு ….
முடியாதென்று ஏதுமில்லை
முடிந்ததாய் போர்கள் ஏதுமில்லை….
இடை வீழ்ந்த அமைதி
இல்லையடா தோல்வி …
கையில் ஏந்து கருவி
காலை தொடும் அருவி ….
விடியல் இன்றி தமிழர் தேசம்
வீதி உறைவதா
விழியன் ஓரம் நீரும் விழவே
வீழ்ந்து அழுவதா ..?
கரிகாலன் பட்டறைகள்
கறையாகி உறைவதா ..?
இன்று பிறந்தான் எங்கள் அண்ணன்
இன்றே ஈழம் வென்று தருவான்
நூறாண்டு நீ வாழ்வாய் – எங்கள்
நூலகமே நீ ஆள்வாய் …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 26-11-2021