இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்
இலங்கையில் 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என உறுதி செயப்பட்டுள்ளதாக . பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மரணமான இந்த நோயாளி 70 வயதைக் கொண்ட ஆண் ஆவார். அத்தோடு கொழும்பு 02 பகுதியச் சேர்ந்தவர்.
கடந்த 23 ஆம் திகதி இவரது இரத்தத்தில் கிருமி நுழைந்ததினால் ஏற்பட்ட
சிக்கலான நிலைமையின் காரணமாக கொழம்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார்.
இது இலங்கையில் பதிவான 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.