இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் – இறுதி போரின் பொழுது இடம்பெற்றது ஒரு இன படுகொலையையே என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி சிவா மோகன்
அவர்கள் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தற்பொழுது இடம்பெற்று
கொண்டிருக்கும் கலை மாலை நிகழ்வில் சிறப்பு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொழுதே இந்த
விடயத்தை தெளிந்த பார்வையுடனும் ,உள்ளார்ந்த மன குமுறலுடனும் பகிர்ந்து கொண்டார் .
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இந்த நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் இவர் ஆற்றிய ,இந்த உரைக்கு பலத்த கரகோஷமும் ,வர வேற்பும் கிடைத்தது
புதுக்குடியிருப்பு மக்களோடு மக்களாக நின்று இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது ,பல இராணுவ
அச்சறுத்தல்கள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுடன் நின்று தனது சமுக பணியை ஆற்றி வருகின்றார் .
இவரை நேரில் பல மக்கள் சந்தித்து,மகிழ்வுற்று , தமது எண்ண கருத்துக்களை பரிமாறி கொண்டதை காண முடிந்தது .
இலங்கையில் இடப்பெற்றது ஒரு இனப்படுகொலையே என
சிறிதரன் எம்பியும் இவரை போன்றே தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .